26.12.13

ஓடும் பஸ்ஸில் நடத்துநர் பணபை பறிப்பு: இளைஞர் துணிகரம்

சென்னை வேளச்சேரி ஓடும் பஸ்ஸில் நடத்துநர் பணப்பை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 கோயம்பேட்டில் இருந்து ஒக்கியம் துரைப்பாக்கம் நோக்கி ஒரு அரசு பஸ் புதன்கிழமை இரவு வந்துக் கொண்டிருந்தது. இந்த பஸ் வேளச்சேரி பிரதான சாலையில் ஆளுநர் மாளிகை அருகே செல்லும்போது அந்த பஸ்ஸில் இருந்த 30 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர், நடத்துநர் பாசில் கையில் இருந்த பணப்பையை திடீரென பறித்துக் கொண்டு ஓடும் பஸ்ஸில் இருந்து இறங்கி ஓடினாராம்.
 இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடத்துநர் பாசிலும்,பயணிகளும் அந்த நபரை விரட்டிச் சென்றனராம். இதைப் பார்த்த அந்த நபர், அங்குள்ள புதர் பகுதிக்குள் ஓடி மறைந்துவிட்டாராம்,
 இதற்கிடையே தகவல் கிடைத்த அங்கு வந்த போலீஸார், அந்த நபரை அந்த புதர் பகுதிக்குள் தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
 இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment