26.12.13

ஷார்ஜாவில் இந்திய மாணவி மர்மச் சாவு

ஷார்ஜாவில் 22 வயதுள்ள இந்திய மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷார்ஜாவில் உள்ள தனது வீட்டில் அந்த இளம்பெண், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கயிற்றில் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை போலீஸாருக்கு தகவல் அளித்தார். மேலும் அவரது உடலையும் மருத்துவமனைக்கு அவர் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அந்த பரிசோதனை முடிந்தபிறகே, அவரது இறப்பிற்கான காரணம் என்னவென்பது தெரிய வரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment