18 December 2013 11:08 AM IST


அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு 10 மடங்கு கூடுதல் சுங்க வரியை வசூலிக்க மத்திய அரசு சுங்கச் சாவடிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்களிடம் இருந்து வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளரோ, ஓட்டுநரோ பணத்தை செலுத்திய பிறகே, குறிப்பிட்ட வாகனம் டோல்கேட்டை தாண்ட முடியும்,' என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment