18.12.13

ஆனந்த தொல்லையாய் மீண்டும் வருகிறார் சீனிவாசன்!


லத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்த டாக்டர் சீனிவாசன், அந்த ஒரு படத்தின் பப்ளிசிட்டியைக்கொண்டே தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார். அந்த படத்தை ஒரேயொரு தியேட்டரில் மட்டுமே வெளியிட்டு வருடக்கணக்கில் ஓட்டினார்.
லத்திகா படத்தை பார்த்ததற்கு அடையாளமாக அந்த டிக்கெட்டை கொண்டு சென்றவர்களுக்கு சன்மானமும் கொடுத்தார். பின்னர், பல படங்களில் தான் நாயகனாக நடிப்பது போன்ற பில்டப்களும் கொடுத்து பரபரப்பு கூட்டினார். இதனால் திரையுலகமே யார்டா இது? என்று அவரை திரும்பிப்பார்த்தது.
குறிப்பாக, அவர் செய்து வந்த அலம்பலைப்பார்த்த சந்தானம், இது நம்மளை விட பெரிய அலம்பல் பார்ட்டியா இருக்கும் போலிருக்கே என்று அவரை வீடுதேடி சென்று தான் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் புக் பண்ணினார்.
அதையடுத்து தான் கலந்து கொண்ட படவிழாக்களுக்கெல்லாம் லாரிகளில் ஆட்களை இறக்கி விட்டு தனது ரசிகர்களாக காட்டிக்கொண்ட சீனிவாசன், எனக்குப்போட்டி ரஜினிதான் என்றெல்லாம் மேடைகளில் முழங்கி வந்தார்.
அதோடு, ஐஸ்வர்யாராயுடன் ஜோடி சேரப்போவதாகவும் அணுகுண்டை தூக்கிப்போட்டார். இதனால் டோட்டல் கோலிவுட்டே ஆடிப்போனது.
இப்படியிருக்கிற நேரத்தில்தான் பணமோசடியில் சிக்கி கம்பி எண்ணச்சென்று விட்டார் சீனிவாசன். அதன்பிறகுதான் திரையுலகம் கொஞ்சம் அமைதி கண்டது.
இருப்பினும் தற்போது மீண்டும் கோதாவில் குதித்திருக்கும் அவர், சில படங்களை கைப்பற்றியிருப்பதோடு தான் நடித்து இன்னும் திரைக்கு வராமல் இருக்கும் ஆனந்த தொல்லை படத்தை வெளியிடும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
அதுவும் சாதாரணமான நாளில் அப்படத்தை வெளியிடப்போவதில்லையாம். ரஜினி நடித்துள்ள கோச்சடையான் வெளிவரும்போதுதான் ரிலீஸ் செய்யப்போகிறாராம். சீனிவாசனின் இந்த அதிரடி அறிவிப்பு மீண்டும் அவரது வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

No comments:

Post a Comment