18.12.13

ஜில்லாவுக்கு ஆரம்பமானது தொல்லை... ஆர்பி சவுத்ரி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியில் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிரடி ரெய்டை ஆரம்பித்துள்ளனர் வருமான வரித்துறையினர்.
ஆர்பி சவுத்ரியின் அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது வீடுகள், அவரது மகன்கள் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் (இருவரும் ஜில்லா பட இணை தயாரிப்பாளர்கள்) உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை தொடர்கிறது.
ஜில்லா படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் முந்தைய படம் தலைவா வெளியாவதில் பெரிய சிக்கல் இருந்ததால், ஜில்லாவை பிரச்சினை இன்றி வெளியிட முயன்றார் ஆர்பி சவுத்ரி. இதற்காகவே படத்தில் அரசியல் வசனங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். இப்போது முதல் சிக்கல் வருமான வரி சோதனை மூலம் வந்துள்ளது. இத்தோடு முடியுமா, அரசியல் ரீதியாக சிக்கல் தொடருமா தெரியவில்லை.
ஜில்லாவுக்கு ஆரம்பமானது தொல்லை... ஆர்பி சவுத்ரி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!

அதே நேரம், பெரிய படம் ரிலீஸை நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற சோதனைகள் வருவது கோலிவுட்டில் வழக்கம்தான்.
தீபாவளிக்கு வெளியான ஆரம்பம், ஆல்இன்ஆல் அழகுராஜா போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் அலுவலகங்கள், மற்றும் இயக்குநர் லிங்குசாமியின் அலுவலகங்களில் பெரிய ரெய்டு நடந்தது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment