18.12.13

ராசிபுரம் : வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த இருவர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டியில் வீட்டில் கள்ள நோட்டுகள் தயாரிப்பதாக காவல்துறைக்கு புகார் வந்தது.
இதையடுத்து குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியதில், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும், கள்ள நோட்டு தயாரிக்கும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ள நோட்டுகள் தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment