18.12.13

ரஜினியின் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை: கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்


கோச்சடையான் முடிந்ததும் அடுத்து ரஜினி நேரடியாக நடிக்கும் ஒரு படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்ட் செய்யப்போவதாகவும், படையப்பா கதையின் பார்ட்-2 வாக அது இருக்கும் என்று செய்திகள் வெளியானது. இதுபற்றி ரவிகுமார் கூறியதாவது: கோச்சடையானில் எனது பங்களிப்பு முடிந்து விட்டது.
ரஜினி சார் கோச்சடையானுக்கு பிறகான படம் பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. அவரது கவனம் முழுவதும் இப்போது கோச்சடையான் மீதுதான் இருக்கிறது. நான் அவரது அடுத்த படத்தை இயக்குவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை.
நான் அடுத்து நான் ஈ நடிகர் சுதீப் நடிக்கும் படம் ஒன்றை தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் டைரக்ட் செய்யப்போகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் மும்முரமாக இருக்கிறேன். இதுபற்றி முறையான அறிவிப்பு வெளிவரும். என்றார்.

No comments:

Post a Comment