18.12.13

தாம்பரம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணம் திருட்டு

சென்னையை அடுத்த தாம்பரம் மின்சார ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைத்து ரூ.61 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
தாம்பரம் மின்சார ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகள் விற்பனை பணம் அங்குள்ள பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் டிக்கெட் கவுண்டருக்குள் புகுந்த திருடர்கள், பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment