20.12.13

நாராயண சாய்க்கு 14 நாள் நீதிமன்றக் காவல்



பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாயை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க குஜராத் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமை மதியம் நாராயண சாய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை ஜனவரி 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதித்துறை நடுவர் ஜதின் தக்கார் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின்போது நாராயண சாயிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 21 சிம் கார்டுகள் குறித்தும், அவரது உதவியாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி குறித்தும் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு போலீஸார் புதன்கிழமை நீதிமன்றத்தில் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாராயண சாய்க்கு எதிரான வழக்கை வலுவிழக்கச் செய்வதற்காக போலீஸார், மருத்துவர்கள், நீதிமன்ற அலுவலர்கள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக துணை ஆய்வாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண சாய் மீது சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண சாயும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியார் ஆசாராம் பாபு தற்போது ஜோத்பூர் சிறையில் உள்ளார்.

No comments:

Post a Comment