20.12.13

"குற்றவாளி போல் என்னை பின்தொடர்கிறார்கள்'


"ஊடகத் துறையினர் என்னை ஒரு குற்றவாளி போல் பாவித்து பின்தொடர்கிறார்கள்' என்று பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வியாழக்கிழமை இவ்வாறு கூறிய அவர், ""சாதாரணமாக எந்த வழக்கிலும் பிரதிவாதியிடம் குற்றச்சாட்டின் நகல் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், என்மீதான குற்றச்சாட்டு அறிக்கையின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை.
என்னிடம் விசாரணை நடத்திய 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினரிடம் நான் அது குறித்து கேட்டபோது, அது ரகசிய ஆவணம் என்று கூறி வழங்க மறுத்து விட்டனர்'' என்று கூறினார்.

No comments:

Post a Comment