20.12.13

"ஒருங்கிணைந்த ஆந்திரத்தை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு'


ஒருங்கிணைந்த ஆந்திரத்தை ஏற்கும் கட்சிக்கே மக்களவைத் தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை ஹைதராபாதில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒருங்கிணைந்த ஆந்திரத்துக்காக கடைசி நிமிடம் வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போராடும். ஹைதராபாத் வந்துள்ள குடியரசுத்தலைவரிடம், ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி, கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மனு அளிக்க வேண்டும் என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர சட்டப்பேரவையில் தற்போது தெலங்கானா வரைவு மசோதா பரிசீலனையில் உள்ளது. பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment