20.12.13

சித்தர்களின் மூலிகையால் நோய் நீங்க – இயற்கை உணவு உலகத்தில் இணைவோம் வாரீர்.

இயற்கை அன்னைக்கும், எல்லாம் வல்ல எம் குருநாதருக்கும் நன்றி. சரியாக 5 மாதத்திற்கு பின் இந்தப்பதிவு நம் தளத்தில் இருந்து வெளிவருகிறது. லட்சகணக்கான இமெயில்கள் அத்தனைக்கும் பதில் அனுப்புவதற்கு சில மாதங்கள் கூட எடுத்துக்கொண்டது,  மீதமுள்ள சில நூறு இமெயில்களுக்கும் இறைவன் அருளால் விரைவில் பதில் அனுப்புகிறோம். நம் தளத்திலே மருந்தை  தெரிவிக்கலாமே என்று பல பேர் கேள்வி கேட்கின்றனர், நம் சித்தர்களின் பாடலில் தேடி வந்து கேட்பவர்களுக்கு மட்டும் மருந்து கொடு என்று இருக்கிறது, அதனால் தான் இமெயில் மூலம் கேட்க சொல்லி மருந்து அனுப்புகிறோம், நமக்கு வரும் பல இமெயில்களில் ஒரே வரியில் கேள்வி கேட்பதை பலர் வாடிக்கையாக  கொண்டுள்ளனர், நோயாளியின் பெயர் , வயது , அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியாமல் எப்படி மருந்து கொடுப்பது ? இந்த காரணத்தினால் பல இமெயில்களுக்கு பதில் அனுப்ப இயலாமல் போனது.
nature
9 மாதங்களுக்கு முன் சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு பெண்மணி (வயது 70) தன் நோய்க்காக மருந்து கேட்டு இருந்தார், ஒரு அரிய வகை நோய் தான், சித்தர்களின் பாடலில் எளிமையான மருந்து இருந்தது உடனடியாக அதை அப்படியே அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். அதற்கு அந்த அம்மா இங்கு நீங்கள் தெரியப்படுத்திய மூலிகைகள் ஏதும் இல்லை என்று கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தினால் வாங்கிக்கொள்கிறேன் என்றும் தெரியப்படுத்தினார், நாமும் எல்லா இடங்களிலும் கேட்டு பார்த்தோம் எங்கும் கிடைக்கவில்லை அதன் பின் கோயம்புத்தூரில் இருக்கும் நம் வலைப்பூ வாசகர் ஒருவர் மூலம் கொல்லிமலை அருகில் கிடைக்குமா என்று தேடிப்பார்க்க கூறினோம். அவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் காட்டிற்கு சென்று மூலிகையைத் தேடி எடுத்ததோடு அதை அந்த அம்மாவிற்கும் அனுப்பி வைத்தார், ஒரே வாரத்தில் மருந்து அந்த அம்மாவின் கைகளில் கிடைத்து அதைபயன்படுத்தி தற்சமயம் பூரண குணத்துடன் நலமுடன் உள்ளார், இந்த மூலிகைகளை குறிப்பிட்ட நட்சத்திரம் வரும் நாளில்தான் பறிக்க வேண்டும், அதன் பின் அதை நிழலில் தான் உணர்த்த வேண்டும், இப்படி சில கட்டுப்பாடுகள், வேடிக்கையாக தெரிந்தாலும் இதன் பின் உள்ள அறிவியல் உண்மை என்ன என்பதை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரே மூலிகையை குறிப்பிட்ட நட்சத்திரம் உள்ள நாள் அன்றும் , மற்ற நட்சத்திரம் வரும் நாளிலும் பறித்து அதே போல் காயவைத்து பொடியாக்கி அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் நம் வலைப்பூ நண்பருக்கு அனுப்பி இரண்டையும் சோதித்து முடிவு கேட்டோம், அவர் இரண்டையும் சோதித்த பின் கூறிய முடிவு குறிப்பிட்ட நட்சத்திரம் அன்று எடுக்கப்பட்ட மூலிகையின் பொடி நோய் நீக்கும் சக்தி 100% அளவிற்கு உள்ளது, மற்ற நட்சத்திரம் உள்ள நாளில் எடுக்கப்பட்ட மூலிகை பொடி நோய் நீக்கும் சக்தி 12% தான் உள்ளது என்றார், சித்தர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள், நமக்கு இன்றும் இதற்கான காரணம் புரியவில்லை.
எங்கேயோ வெளிநாட்டில் முகம் தெரியாத பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் 30 வயதுள்ள இளைஞர் எதையும் எதிர்பார்க்காமல் மூலிகையை தேடி எடுத்ததில் இருந்து அதை சோதித்து கூரியர் கட்டணத்துடன் தன் பாட்டியாகவே  நினைத்து மருந்து அனுப்பி இன்று அந்த பாட்டி உடல் நலத்துடன் இருப்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, இதே போல் நமக்கு மூலிகை தேடி எடுத்து கொடுக்கும் அத்தனை வாசகர்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்ய முடியாவிட்டாலும் எம் குருநாதரின் அன்பை உங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
7 பெரிய நோய்களுக்கு நம் சித்தர் பெருமக்களின் அருளால் கிடைத்த மூலிகைகளை கொண்டு குணப்படுத்தியதோடு அவர்களில் ஒவ்வொருவரின் பேட்டியையும் விரைவில் நம் வலைப்பூவில் வெளியீட இருக்கிறோம். சில அரிய காயகல்ப
முறைகளை வெளியே சொல்ல அனுமதி இல்லாத காரணத்தில் வரும் காலத்தில் நம் வலைப்பூ வாசகர்களில் சேவை உள்ளம் கொண்டோரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. தங்களுடைய முழுமையானத் தகவல்களை கொடுத்து நீங்களும் இயற்கை உணவு உலகத்தில் இணையலாம்.

No comments:

Post a Comment