20.12.13

பிரணாப் இன்று சென்னை வருகை


பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை (டிச.20) சென்னை வருகிறார்.

இந்திய பொறியாளர்கள் கழகம் சார்பில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள "தி லீலா பேலஸ்' ஹோட்டலில் 28ஆவது இந்திய பொறியாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பகலில் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் பிரணாப், பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் மதியம் 1 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அந்தக் கல்லூரியில் ரூ. 11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணகவியல் மற்றும் பொருளாதாரப் பள்ளியைத் திறந்து வைக்கிறார். பின்னர் பிற்பகலில் அவர் தில்லி திரும்புகிறார்.
குடியரசுத் தலைவர் வருகை காரணமாக, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment