20.12.13

அமெரிக்க கப்பலுக்கு டீசல் வழங்கிய வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

அமெரிக்கக் கப்பலுக்கு டீசல் வழங்கிய வழக்கில் கைதான 5 பேரில் மூவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, தூத்துக்குடி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்ததாக அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சீ மேன் கார்டு ஓகியோ என்ற கப்பல் அக்டோபர் 12-ஆம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டது. கப்பலுக்கு திருட்டுத்தனமாக டீசல் வழங்கியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய அன்டன் விஜய், ரஞ்சித்குமார், விஜய், முருகேசன், செல்வம் ஆகிய 5 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
இதனிடையே, 5 பேரும் ஜாமீன் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, கியூ பிரிவு காவல் நிலையத்தில் விஜய், ரஞ்சித்குமார், முருகேசன் ஆகிய மூவரும் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment