20.12.13

தேமுதிக சார்பில் 23-இல் கிறிஸ்துமஸ் விழா


தேமுதிக சார்பில் டிசம்பர் 23-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கிறிஸ்துமஸ் நன்னாளை முன்னிட்டு டிசம்பர் 23-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். இந்த விழாவில் நானும் பங்கேற்று ஏழை மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்கும் பிரியாணியும் வழங்க உள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் பேராயர் எஸ்றா சற்குணம், பேராயர் எஸ்.ராஜாசிங், பேராயர் ஜெ.ஜான் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த நன்னாளில் தேமுதிகவினர் தங்களால் இயன்ற அளவுக்கு இனிப்பு மற்றும் கேக்குகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment