16.12.13

ஜப்பான் தூதரக அதிகாரி மீது தாக்குதல்

யேமன் நாட்டில் ஜப்பான் தூதரக அதிகாரியை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
யேமன் தலைநகர் சனாவில் ஜப்பான் தூதரக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தனது காரில் தூதரகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது காரை வழி மறித்து, காரில் இருந்து அவரை வெளியே இழுத்துச் சென்று கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது. கத்திக்குத்தில் அந்த அதிகாரிக்கு 5 இடத்தில் காயம் ஏற்பட்டது.
இதையறிந்ததும் தூதரக ஊழியர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரை கடத்துவதற்கு மர்ம நபர்கள் முயற்சி செய்தார்களா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment