16.12.13

மீனவர்களை விடுவிக்க இந்தியாவிடம் இலங்கை வலியுறுத்தல்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மனிதநேய அடிப்படையில் தமது நாட்டு மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்தியாவிடம் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கை மீன்வளத்துறைத் தலைவர் நிமல் ஹெட்டியராச்சி கூறியது:
இலங்கை மீனவர்கள் 213 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு உள்பட தென்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். விரைவில் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ளதால் இலங்கை மீனவர்களை மனிதநேய அடிப்படையில் இந்தியா விடுவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன் இந்தியாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு பதிலுக்காக காத்திருக்கிறோம். இலங்கை மீனவர்களின் 40 படகுகளை இந்தியா பிடித்து வைத்துள்ளது. இந்திய அதிகாரிகளின் கணக்குப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 227 மீனவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 70 படகுகளை இலங்கை பிடித்து வைத்துள்ளது என்று ஹெட்டிராச்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment