16.12.13

கம்போடியாவில் புத்த பீடம் திருட்டு

கம்போடியாவில் புத்த பீடம் இருந்த தங்கத்தாலான தாழி திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியபோது, மேற்கண்ட தாழிக்குள் புத்தரின் பீடம், தலைமுடி, பற்கள் மற்றும் எழும்புகள் இருந்தது. உடாங் நகரில் உள்ள மலைக் கோவிலில் இருந்து இந்தத் தாழி திருட்டு போனது.கம்போடியாவில் உள்ள மக்களில் 90 சதவிகிதம் பேர் புத்த மதத்தைத் தழுவி இருப்பதால், இந்தத் தாழி மிகவும் முக்கியமானதாகும்.இந்தத் தாழி தற்போது எங்கு உள்ளது என்பது தெரியவில்லை. அதை தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் திருட்டு தொடர்பாக பாதுகாவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment