16.12.13

மாவட்ட கூடைப்பந்து போட்டி தொடக்கம்

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
தொடக்க நிகழ்ச்சிக்கு, பிஆர்டி குழுமங்களின் மேலாண் இயக்குநர் டிடி பரந்தாமன் தலைமை வகித்தார். உடல்கல்வி இயக்குநர் எம்.ஏ. வள்ளுவன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லோகநாதன் ஆகியோர் போட்டிகளைத் தொடக்கிவைத்தனர்.
முதல் ஆட்டத்தில் கே.எஸ்.ஆர் கல்லூரி அணி, பாவை கல்லூரி அணியை 56:52 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் பிஆர்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அணியை 38:16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.
பெண்கள் பிரிவில் பாவை, கே.எஸ்.ஆர், விவேகானந்தா ஆகிய மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை (டிச.15) மாலை இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் நடைபெறும்.

No comments:

Post a Comment