28.12.13

10 தமிழக அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அந்தஸ்து: பிரணாப் உத்தரவு


தமிழகத்தைச் சேர்ந்த 10 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி) அந்தஸ்து வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அரசாணை:
இந்திய ஆட்சிப் பணிக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் தேர்வு செய்யப்படும் நடைமுறையின்படி, தமிழக அரசுப் பணியில் உள்ள தகுதி வாய்ந்த 10 அதிகாரிகளை 2012-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்வுப் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு "தமிழ்நாடு பிரிவு' ஒதுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் அதிகாரிகள்: எஸ். மலர்விழி, எஸ். சுரேஷ் குமார், எஸ். பழனிசாமி, டாக்டர் எஸ். பிரபாகரன், எம். லக்ஷ்மி, ஆர். கஜலக்ஷ்மி, கே.எஸ். கந்தசாமி, எஸ். கணேஷ், சி. கதிரவன், எஃப்.இன்னொசென்ட் திவ்யா.
மேற்கண்ட அரசாணையை அரசிதழில் வெளியிட தமிழக அரசின் தலைமைச் செயலரை மத்திய பணியாளர், பயிற்சித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment