28.12.13

ஒப்பந்த அடிப்படையில் கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி: ஒருவர் கைது

சென்னையைச் சேர்ந்தவரிடம் ஒப்பந்த அடிப்படையில் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து ரூ.8.50 லட்சம் மோசடி செய்த ஒருவரை சிதம்பரம் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கார்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை தி்ருவெற்றியூரைச் சேர்ந்த கண்ணன் (48). இவர் நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அகமது (42) என்பவரிடம் தனது 4 சொகுசு கார்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். கார்களை அகமது சிதம்பரம் பஸ்நிலைய ஸ்டேன்டில் நிறுத்தி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.
ஆனால் கடந்த 3 மாதமாக அகமது வாடகை பாக்கி ரூ.8.50 லட்சத்தையும் கொடுக்கவில்லை. கார்களை திருப்பிக் கேட்டபோது கார்களையும் கொடுக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கண்ணன் சிதம்பரம் நகருக்கு வந்து விசாரித்த போது மேற்கொண்ட போது அகமது கார்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து கண்ணன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு அகமதை கைது செய்து, 4 கார்களையும் பறிமுதல் செய்தார்.

No comments:

Post a Comment