28.12.13

மூன்றாண்டு மருத்துவப் படிப்பு விரைவில் தொடக்கம்


கிராமங்களில் மருத்துவர்கள் பணி செய்வதற்கு வசதியாக மூன்று ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.

பெங்களூரு விகாஸ் செüதாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சுகாதாரத் துறையின் வளர்ச்சிப் பணிகளின் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கிராமப் பகுதிகளுக்கு பணி செய்ய பெரும்பாலான மருத்துவர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர். இதனால், கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர காலத்தில் உரிய சிசிச்சை கிடைப்பதில்லை.
இதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, மூன்று ஆண்டு மருத்துவப் பட்டப் படிப்பைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து, விரைவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலங்களுக்கு மருத்துவச் சேவைகளுக்காக ரூ. 1.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவச் சேவையில் கர்நாடகம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. பேறு காலத்தில், குழந்தைகள் இறப்பைத் தடுப்பதில் கர்நாடகம் 2-ஆம் இடத்தில் உள்ளது.
25 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனைகளைத் தொடங்க மாநில அரசு அனுமதி கோரியுள்ளது. அதற்கு அனுமதி வழங்கப்படும். சுகாதாரத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கர்நாடகத்திற்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்றார் குலாம்நபி ஆசாத்.

No comments:

Post a Comment