28.12.13

அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்க வேண்டாம்



குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா தர முடியாது என அமெரிக்கா தொடர்ந்து மறுப்பது அதன் பக்குவமற்றத் தன்மையைக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு, 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று கூறி அவரை விடுவித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாஷிங்டனில் வியாழக்கிழமை கூறும்போது, ""மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் தற்போதும் எந்தவித மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2005 ஆம் ஆண்டு மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்நிலையில் புது தில்லியில் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாதததால் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு விசா தர முடியாது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறுவது அதன் பக்குவமற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்தப் போக்கு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதுபோல் உள்ளது.
மோடி விண்ணப்பிக்க வேண்டாம்: எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை. 2005-இல் விசா மறுக்கப்பட்ட பிறகு அவர் அமெரிக்காவிடம் விசா கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை. இந்த விசா விவகாரத்தில் தொடர்ந்து தவறான பிரசாரம் செய்பவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சில நாடுகள் கட்டப்பஞ்சாயத்து முறையில் மோடியை குற்றவாளி என்று வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்துள்ளன.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கு தொடர்பாக மோடியிடம் தீவிரமாக விசாரித்தது போல், வேறு எந்தத் தலைவரிடமும் விசாரணை நடத்தியதில்லை என்று அருண் ஜேட்லி கூறினார்.குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா தர முடியாது என அமெரிக்கா தொடர்ந்து மறுப்பது அதன் பக்குவமற்றத் தன்மையைக் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு, 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று கூறி அவரை விடுவித்தது. இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாஷிங்டனில் வியாழக்கிழமை கூறும்போது, ""மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் தற்போதும் எந்தவித மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே கடந்த 2005 ஆம் ஆண்டு மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்நிலையில் புது தில்லியில் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாதததால் விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு விசா தர முடியாது என்று அமெரிக்கா தொடர்ந்து கூறுவது அதன் பக்குவமற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.
மேலும் அமெரிக்காவின் இந்தப் போக்கு இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதுபோல் உள்ளது.
மோடி விண்ணப்பிக்க வேண்டாம்: எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அமெரிக்க விசாவுக்கு மோடி விண்ணப்பிக்கத் தேவையில்லை. 2005-இல் விசா மறுக்கப்பட்ட பிறகு அவர் அமெரிக்காவிடம் விசா கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை. இந்த விசா விவகாரத்தில் தொடர்ந்து தவறான பிரசாரம் செய்பவர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சில நாடுகள் கட்டப்பஞ்சாயத்து முறையில் மோடியை குற்றவாளி என்று வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்துள்ளன.
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கு தொடர்பாக மோடியிடம் தீவிரமாக விசாரித்தது போல், வேறு எந்தத் தலைவரிடமும் விசாரணை நடத்தியதில்லை என்று அருண் ஜேட்லி கூறினார்.

No comments:

Post a Comment