28.12.13

இறுதிகட்டத்தில் காவியத் தலைவன் படப்பிடிப்பு


அரவான் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் படம் “காவியத் தலைவன்”.

இப்படத்தில் சித்தார்த் நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிருத்விராஜ், நாசர், அனைகா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஏற்கெனவே 6 பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒய் நாட் ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
அந்தக் கால இசை நட்சத்திரங்கள் கே.பி. சுந்தராம்பாள், கிட்டப்பா  வாழ்க்கைப் பற்றிய படமாக இப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நேற்றுடன் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.
கிட்டத்தட்ட 90 சதவிகதப் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment