28.12.13

ஆதர்ஷ் அறிக்கையை நிராகரித்த மகாராஷ்ட்ரா அரசின் முடிவு ஏற்புடையதல்ல: ராகுல்



புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர்
  இரண்டு முக்கிய விஷயங்கள் குறித்து இங்கு நாம் பேசவுள்ளோம் ஒன்று விலைவாசி உயர்வு. மற்றொன்று ஊழல் மற்றும் லோக்பால். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
காங்கிரஸ்.ஆளும் 12 மாநிலங்களின் வரும் 2014 பிப்ரவரியில்  லோக் ஆயுக்தா அமைக்கப்படும். ஊழலை எதிர்ப்பது பற்றி பேசுபவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். ஊழலை ஒழிக்க  கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
ஆதர்ஸ் அறிக்கையை நிராகரித்த மகாரஷ்ட்ரா அரசின் முடிவு ஏற்புடையதல்ல. ஆதர்ஷ்முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பாதுக்கும் பேச்சுக்கே இடமில்லை. மகாரஷ்ட்ரா அரசு ஆதர்ஸ் அறிக்கையை நிராகரித்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment