28.12.13

தமிழ்ச் சங்கத்தில் இன்று சிறப்புச் சொற்பொழிவு

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை (டிச.28) சிறப்புச் சொற்பொழிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்ச் சங்க நிறுவனர்களில் ஒருவரான புலவர் க.சுப்ரமணியனார் அறக்கட்டளை சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.
"மாவீரன் கர்ணன் மோட்சம்' என்ற தலைப்பில் வேலூரைச் சேர்ந்த ஜெயபாலன் பேசுகிறார். கல்லூரி முன்னாள் முதல்வர் எழில், சங்கத் தலைவர் கோ.தாமோதரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment