28.12.13

ஸ்பெயின் பெண் பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மகாராஷ்டிர மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த பெண் இசைக் கலைஞர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் புற நகரான பாந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தப் பெண்ணை முகமது பதுஷா அன்சாரி என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஸி, குற்றவாளி முகமது பதுஷா அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment