28.12.13

151 திருட்டு வழக்குகளில் 143 பேர் கைது: ரூ.3.17 கோடி பொருள்கள் மீட்பு

மாநகர கிழக்கு மண்டல போலீஸôர் 151 திருட்டு வழக்குகளில் 143 பேரை கைது செய்து ரூ. 3.17 கோடி மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளார்.
பெங்களூரு மாநகர மத்திய மண்டல போலீஸார் மீட்கப்பட்ட ரூ.3.17 கோடி திருட்டு பொருள்களை அதன் உரிமையாளர்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை சென்ரல் கல்லூரி ஞானஜோதி அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர், மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருள்களை பார்வையிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட திருட்டு பொருள்களை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கினர்.
பின்னர் போலீஸ் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் பேசியது: மாநகர மத்திய மண்டல போலீஸôர் ரூ. 3.17 கோடி மதிப்புள்ள 161.5 கேரட் வைர நகை, 4 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கநகைகள், 2 கிலோ 750 கிராம் வெள்ளிப் பொருள்கள், 55 இருசக்கர வாகனங்கள், 9 கார்கள், 1 ஆட்டோ, 183 செல்போன்கள், 45 கணினி, 25 மடிகணினி, 4 யானை தந்தம், ரூ. 6.3 லட்சம் ரொக்கப்பணத்தை மீட்டுள்ளனர். பொதுமக்களுக்கு தங்கள் உடமைகளை பாதுகாப்பாத்தில் கவன செலுத்த வேண்டும். சிறப்பாக செயல்பட்ட மத்திய மண்டல போலீஸôரை பாராட்டுகிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment