25.12.13

இளைஞர் படைக்கான உடல் தகுதித் தேர்வு டிச. 30-ல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கான உடல் தகுதித் தேர்வு டிசம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 330 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 11-ம் தேதி நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடற்கூறு அளத்தல், உடற்தகுதி ஆய்வு செய்தல் மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஆகியவை டிசம்பர் 30-ம் தேதி முதல் தூத்துக்குடி தருவை மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பதிவு எண்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக் குழும இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ர்ப்ண்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் ஆகிய இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது.
 அஞ்சலகம் மூலமும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்பக் கடிதம் கிடைக்கப் பெறாக தகுதியான நபர்கள்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிசம்பர் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி மாலை 5 மணி வரைப் பெற்று கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment