25.12.13

”என்றென்றும் ரவிக்குமார்”




ராஜ் தொலைக்காட்சியின் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருனத்தில் கே.எஸ். ரவிக்குமார் என்ற படைப்பாளியை போற்றும் விதமாக ”என்றென்றும் ரவிக்குமார்”  என்ற  பெயரில் மாபெரும் பாராட்டி விழா எடுக்கின்றனர்.
வருடா வருடம் தன்னுடைய பிறந்த நாளோடு ஒரு படைப்பாளியில் சாதனையையும் கொண்டாடுவது ராஜ் தொலைக்காட்சியின் வழக்கம்.அந்த வகையில் இருபதாவது ஆண்டில்  காலடி எடித்து வைக்கும் ராஜ் தொலைக்காட்சி வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாட்டாமை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரை போற்றும் விதமாக இந்த மாபெறும் பாராட்டு விழா எடுக்கிறது.
ரகுவரனில் ஆரம்பித்து கமல்,ரஜினி உட்பட அத்தனை நட்சத்திரங்களையும் இயக்கிய இயக்குநர் இவர்.
இவர் பரம்பரை பணக்கார குடும்பதில் பிறந்தாலும் பழகுவதற்க்கு எளிமையானவராய்,இன்சொல் பேசுபவராய் மட்டுமில்லாமல் வெற்றி மகுடங்கள் பலவற்றை  சுமந்தாலும் அதனால் தலைக்கனம் ஏதுமின்றி கே.எஸ் ரவிக்குமார் நம் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் வித்தியாசமானவர்.
ஒரு மனிதன் அனைவருக்கும் நண்பனாய் இருப்பது அபூர்வம்.எதிரிகள் இல்லாமல் இருப்பது மிக அபூர்வம் .அப்படி ஒருமனிதர் தான் கே.எஸ் ரவிக்குமார் இவரை போற்றும் விதமாக ராஜ் தொலைக்காட்சி இந்த விழா எடுக்கிறது
இந்த விழாவானது  04.01.2014 -ல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில்  மாலை 5.30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்க இருக்கிறார்.மேலும் இந்த வெற்றி விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்குபெரும் கலைநிகழ்சிகளும்,இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களுக்கு இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் பங்கு பெறும் இசை நிகழ்சிகளும் நடைபெற உள்ளன.

No comments:

Post a Comment