25.12.13

தேவயானியின் பணிப்பெண்ணுக்கு அமெரிக்க உதவி செய்தது அம்பலம்

பணிப்பெண்னை அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற விவகாரத்தில் விசா மோசடி புகாரில் சிக்கிய இந்திய தூதரக அதிகாரி தேவயானி சமீபத்தில்  கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தேவயானி வீட்டு பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்திற்கு அமெரிக்க அரசு விமான டிக்கெட் வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பணிப்பெண்ணான சங்கீதா மற்றும் அவரது கணவர் பிலிப் ரிச்சர்ட், மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தில்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டிருப்பதும், இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment