25.12.13

ரஜினிக்காக உருவான கதையில் அஜித்?

அஜித், தமன்னா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் “வீரம்” திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.
இதைத்தொடர்ந்து அஜித், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்து ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.
கௌதம் மேனன் படம் முடிந்த பிறகு அஜித், கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்காகத் தயார் செய்த கதையை அஜித்திடம் சொல்லி கே.வி.ஆனந்த் ஓ.கே வாங்கிவிட்டாராம். இப்போது ரஜினிக்குப் பதில் அஜித்தான் நடிக்கப் போகிறாராம்.
கே.வி.ஆனந்த் தற்பொழுது தனுஷ் நடிக்கும் அனேகன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தினை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment