25.12.13

யாத்திரை நிறுவன உரிமையாளர் எஸ்.வி.டி. ஐயர் காலமானார்

சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமி யாத்ரா என்ற ஆன்மீகச் சுற்றுலா நிறுவன உரிமையாளர் எஸ்.வி.டி. ஐயர்  அவருடைய சேப்பாக்கம் இல்லத்தில் இன்று அதிகாலை  2 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 90.
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக, ஆன்மிக யாத்திரை சேவையை முன்னின்று நடத்தியவர். வட மாநில புனிதத் தலங்களுக்கு அன்பர்களை அழைத்துச் சென்று சிறப்பான சுற்றுலா வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்த அவர் ஒரு புரோகிதராக தனது வாழ்க்கையைத் துவங்கினார். 1967ல் காஞ்சி மகாபெரியவரின் வழிகாட்டலிலும் யோசனையிலும் இவர் புனிதத் தல யாத்திரையாக பக்தர்களை அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார்.
தொடர்புக்கு : எஸ்.டி.சரவணகுமார் 044 - 28516845

No comments:

Post a Comment