25.12.13

நாங்கெல்லாம் ஏடாகூடம்: சினிமா டைட்டில் தான் இது



குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம். இதில், புதுமுக நாயகனாக மனோஜ் தேவதாஸ், நாயகியாக பார்வதி சுரேஷ் நடிக்கின்றனர்.
இவர்களுடன் விசாகர், ஹென்சா, ராஜேஷ், ஜார்ஜ் விஜய், ஜாக்கி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு சரவணன் பிள்ளை, இசை சார்லஸ் மெல்வின், கலை கலை முருகன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய குமார் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும் போது, "வட சென்னை பகுதியில் சுற்றி திரியும் ஏடாகூட இளைஞர்களை, பாக்ஸிங் மாஸ்டர் நல்வழிப்படுத்துவதே படத்தின் கதை. இப்படத்திற்காக 40 நாட்கள் நாயகனுக்கு பாக்ஸிங் பயிற்சி கற்றுக்கொண்டார். படப்பிடிப்பு முழுவதும் வடசென்னையில் உள்ள திருவொற்றியூர், ராயபுரம் பகுதியில் நடந்தது.
இப்பகுதியில் அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடந்த போதும், அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் பல்வேறு இடையூறுகளை அளித்தனர். ஆனால், அதையும் மீறி தான் இப்படத்தை எடுத்துள்ளோம். இப்படம் வருகிற பிப்ரவரி 15ம் தேதி வெளியாகிறது' என்றார்.

No comments:

Post a Comment