25.12.13

ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவராக பெண்களின் பெயர்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாபில் புதிதாக வழங்கப்பட உள்ள ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவராக அந்தந்த குடும்பங்களில் உள்ள மூத்த பெண்ணின் பெயர் இடம்பெறும் என்று அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. எனினும், ஒரு குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இல்லாத பட்சத்தில் குடும்பத் தலைவராக ஆண்கள் குறிப்பிடப்படுவார்கள். பழைய குடும்ப அட்டைகளிலும் பெண்களை குடும்பத் தலைவராக குறிப்பிடுவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று பஞ்சாப் மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment