25.12.13

கிறிஸ்துமஸ்: பிரணாப் வாழ்த்து



கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
""கிறிஸ்துமஸ் பண்டிகையின் இனிய தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறி மகிழ்கிறேன். அமைதி மற்றும் நல்லெண்ணம் பற்றி இயேசு கிறிஸ்து நமக்கு வழிகாட்டினார். அவரது இரக்கம், போதனைகள் போன்றவை மேலும் பல நூற்றாண்டுகளாக மனிதர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும்'' என்று பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment