25.12.13

7 கடிகாரங்கள் நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த, ஸ்விஸ் கடிகார நிறுவனம், கடந்த ஆண்டு, வைர கற்கள் பதிக்கப்பட்ட, தங்க கடிகாரங்களை தயாரித்து, அதை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை, தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்தது.
அதற்காக, முன்புறம் ஏழுமலையானும், பின்புறம் ஆனந்த நிலையத்தின் உருவமும் கொண்ட 7 கை கடிகாரங்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் 2 கடிகாரங்களை, அந்நிறுவனத்தினர் செவ்வாய்க்கிழமை, ஏழுமலையானின் பாதத்தில் வைத்து, பூஜை செய்தனர்.
ஒரு கை கடிகாரத்தின் மதிப்பு, ரூ.27 லட்சம். இவற்றை, இன்னும் 2 மாதங்களில், ஏலம் விட உள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment