25.12.13

நஸ்ரியாவின் சாமர்த்தியம்!



ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடைபெற்றது. நாயகி நஸ்ரியா, இசை அமைப்பாளர் ஜிப்ரான், இயக்குநர் அனிஸ், ஒளிப்பதிவாளர் லோகநாதன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நாயகன் ஜெய், ‘வடகறி’ படத்திற்காக வெளிநாடு சென்றிருப்பதால் வர இயலவில்லை என்று காரணம் சொன்னார்கள். அவர் இல்லாத குறையைத் தன் கொஞ்சல் பேச்சால் சமன் செய்தார் சர்ச்சை நாயகி நஸ்ரியா.
தொடக்கத்திலேயே சர்ச்சை பற்றித்தான் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ‘இந்தப் படத்தில் சர்ச்சைகள் எதுவும் இல்லை. அந்தப் படத்துடனே முடிந்துவிட்டது’ என்றார்.
‘நய்யாண்டி சர்ச்சையால் உங்களுக்குப் படவாய்ப்புகள் குறைந்துவிட்டதாமே, உண்மையா?’ என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, ‘இது ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா. அதனால் அதைப் பற்றி மட்டும் பேசினால் நன்றாக இருக்கும்’ என்றவர், அந்தப் படத்தில் கமிட்டான கதையைச் சொன்னார்.
‘என்னுடைய ‘யுவ்’ ஆல்பம் பார்த்துட்டு இயக்குநர் அனிஸ் என்னைத் தேடி வந்தார். நான் 11-ம் வகுப்பு முடிச்சிட்டு 12-ம் வகுப்பு போற சமயம் அது. அப்போது எனக்கு சினிமாவுல நடிக்கணும் என்கிற பிளான் எதுவும் இல்லை. அப்பா, அம்மா கூட சேர்ந்து தான் அனிஸ் சொன்ன கதையைக் கேட்டேன். எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அதனால் ஓகே சொல்லிட்டேன். இதுதான் என்னுடைய முதல் தமிழ் படம். ஆனால், இதுக்கு முன்னாடியே சில படங்கள் வெளியாகி விட்டன. இந்தப் படத்தில் நடிக்கும்போது தான் தமிழ் இண்டஸ்ட்ரி பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். தமிழ் எப்படி பேசணும்னு கத்துக்கிட்டேன். இது முழுமையான குடும்பப் படம். எல்லாரும் ரசிக்கிற மாதிரி இருக்கும்’ என்றார்.

No comments:

Post a Comment