25.12.13

மலேசிய போலீஸ் அதிகாரியாக சரத்குமார்


நறுமுகை படத்தில் சரத்குமார் மலேசிய போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

நிமிதா புரொடக்ஷன் சார்பில் ஜான் வர்கீஸ் தயாரிக்கும் படம் நறுமுகை. இதில், அறிமுக நாயகனாக அர்ஜுன்லால், நாயகிகளாக இஷிதா, நிகிதா நடிக்கின்றனர். இவர்களுடன் சரத்குமார், மனோஜ் கே ஜெயின், எம்.எஸ் பாஸ்கர், பிளாக்பாண்டி ஆகியார் நடிக்கின்றனர். சரத்குமார் மலேசிய போலீஸ் அதிகாரியாகவும், மனோஜ் கே.ஜெயன் மலேசிய டாக்சி டிரைவராகவும் நடிக்கிறார்கள்.
ஆல்பி ஒளிப்பதிவு செய்கிறார். ஜெசின் ஜார்ஜ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி ஜான் ராபின்சன் இயக்குகிறார். இவர், மேஜர் ரவியிடம் உதவியாளராக பணியாற்றியவர். படம் பற்றி இயக்குனர் கூறும் போது, "மலேசியாவை சேர்ந்த நாயகிக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த ரோகித்துக்கும் உண்டான காதலை சொல்லும் படம் தான் நறுமுகை. இப்படத்தில் அன்வர் அலி எனும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார்.
இப்படத்திற்காக ரூ.20 லட்சம் ரூபாய் செலவில் செட் போடப்பட்டு 10 நாட்கள் படமாக்கப்பட்டது. தற்போது இதன் 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இப்படம் 5 கோடி செலவில் பிரம்மண்டாமாக உருவாகி வருகிறது' என்றார். தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் போர்ஷனுக்காக கோவையிலும், மலையாள போர்ஷனுக்காக எர்ணாகுளத்திலும் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment