25.12.13

பாரக் ஏவுகணை வழக்கை மூடியது சி.பி.ஐ


இஸ்ரேலிடமிருந்து பாரக் ஏவுகணைகளை வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக தெகல்கா இணையதளம் அம்பலப்படுத்தியது.

இதுதொடர்பாக முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ், சமதா கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி, முன்னாள் கடற்படை தளபதி சுஷில் குமார், பாதுகாப்புத்துறை ஏஜெண்ட் சுரேஷ் நந்தா உள்ளிட்ட பலர் மீது கடந்த 2006ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்த வழக்கு தொடர்பான போதுமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காததால்  வழக்கை கைவிட சிபிஐ முடிவு செய்தது. இதற்காக அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. இதையடுத்து நேற்று பாரக் ஏவுகணை ஊழல் வழக்கை சி.பி.ஐ. மூடியது.


No comments:

Post a Comment