25.12.13

அகமதுவிடம் கோபித்த ஜீவா


ஜீவாவின் ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கும் படம்தான் என்றென்றும் புன்னகை.

ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம், வினய், நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த வெள்ளிகிழமை வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் ஏக வரவேற்பு. இந்த  வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் என்றென்றும் புன்னகை படத்தின் சக்சஸ் மீட் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய நாயகன் ஜீவா, படத்தோட ஷூட்டிங்கில் நான், வினய், சந்தானம் மூணு பேரும் எங்களுக்குள்ள பேசிகிட்டது என்னனா, இந்த படம் ஓடலேன்னா வினய் சந்தானத்துக்கு மேனேஜர் ஆகிடட்டும். நான் ஏதாவது ரெஸ்ட்ராரெண்ட் வச்சு பொழச்சுக்கலாம்-னு இருந்தேன். நல்ல வேலையா படம் ஓடி எங்களை காப்பாத்திருச்சி.
படத்தோட பேரை மட்டும் என்றென்றும் புன்னகைன்னு வச்சுகிட்டு படம் முழுக்க என்னை சிடுசிடுன்னு காட்டுறீங்களேன்னு அகமதுவிடம் கோவிச்சுகிட்டேன்’. ஆனா அதோட சக்சஸ் இப்போ தெரியுது” என்றார் ஜீவா. மேலும் நிகழ்ச்சியில் வினய், நாயகி த்ரிஷா, இயக்குனர் அகமது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment