25.12.13

பிரதமர் வேட்பாளரை உரிய நேரத்தில் ராகுல் முடிவு செய்வார்


காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளரை கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உரிய நேரத்தில் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் துவிவேதி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவாரா என்று செய்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விக்கு ஜனார்த்தன் துவிவேதி அளித்த பதில்: "காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். மேலும், கட்சியின் வருங்காலத் தலைவராக தற்போது துணைத் தலைவர் பதவியில் உள்ள ராகுல் காந்தி உள்ளார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், கட்சியின் பிரதமர் வேட்பாளரைப் பொருத்த வரை தலைவர் சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோருடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவு செய்வார். அரசியலில் அவ்வப்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும். அதன்படி, உரிய நேரத்தில் எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்' என்று கூறினார்.

No comments:

Post a Comment